
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலனா ஓசபென்கோ, முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜெலனா ஓசபென்கோ, ருமேனியாவின் இரினா கமிலியா மோதினர்.
இதில், ஓசபென்கோ 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் இரினா கமிலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
கடந்த பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் போது அதிரடியாக ஆடிய ஜெலனா இப்போட்டியில் இரினாவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோ, கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், அனெட் கொண்விட்டிடுடன் மோதினார். இதில், 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அனெட் கொண்விட்டிடம் தோல்வியுற்று வெளியேறினார் வீனஸ்.
உலக நான்காம் நிலை வீராங்கனை எலினா விடோலினா, முன்னாள் முதல்நிலை வீராங்கனை கரோலினா பிஸ்கோவா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.