கொரிய ஓபன்: ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து…

 
Published : Sep 16, 2017, 11:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
கொரிய ஓபன்: ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து…

சுருக்கம்

Korean Open Japan defeat the veteran and progress to semi-finals

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் மினட்சு மிடானியுடன் மோதினார்.

இதில், 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் மினட்சு மிடானியை தோற்கடித்தார் சிந்து.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சிந்து தனது அரையிறுதியில் சீனாவின் பிங் ஜியாவை சந்திக்கிறார்.

பிங் ஜியாவ் தனது காலிறுதியில் 21-7, 21-13 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஜீ ஹியூனை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!