Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!

Published : Sep 26, 2023, 03:11 PM ISTUpdated : Sep 26, 2023, 03:57 PM IST
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!

சுருக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த குதிரையேற்றத்தில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தங்கம் கைப்பற்றியுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த குதிரயேற்ற பிரிவில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது. சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்ற அணிவகுப்பு போட்டியில் இந்தியா தங்களின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளனர். இன்று காலை 5.30 மணி நடந்த இந்தப் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நடப்பு சாம்பியன் Mohun Bagan FC Team!

இதுவரையில் நடந்த போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கத்துடன் 14 பதக்கங்களுன் பதக்க பட்டியலில் 6 ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதற்கு முன்னதாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்தியா, 2ஆவதாக நேற்று நடந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கம் கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று குதிரையேற்றத்தில் 3ஆவது தங்கத்தை கைப்பற்றியுள்ளது. சீனா, 39 தங்கம், 21 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் 69 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளது. தென் கொரியா 10 தங்கம், 10 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கத்துடன் 33 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், ஜப்பான் 4 தங்கம், 14 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கத்துடன் 31 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது.

Pakistan Visa: ஒரு வழியாக பாகிஸ்தானுக்கு விடிவு காலம் பொறந்தாச்சு; விசா கிடைத்து இந்தியா வரும் பாக். டீம்!

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?