
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 57ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
முதல் முறையாக டிராபியை தட்டி தூக்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் – அனுபவத்தை பகிர்ந்த அஸ்வின்!
இந்த தொடரில் நீச்சல், ரோவிங், டென்னிஸ், ஜூடோ, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற மகளிருக்கான டேபிள் டென்னிஸ் 16ஆவது சுற்று போட்டியில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத் ஆகியோர் அடங்கிய அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி ரோமானியா அணியை எதிர்கொண்டது. இதில், இந்தியா 3 -2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.