தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்திய மகளிரணி அறிவிப்பு; கேப்டன் மிதாலி ராஜ் தலைமை தாங்குகிறார்...

 
Published : Jan 11, 2018, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்திய மகளிரணி அறிவிப்பு; கேப்டன் மிதாலி ராஜ் தலைமை தாங்குகிறார்...

சுருக்கம்

Indian women announcement to clash with South Africa Captain Mithali Raj presides ...

தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிரணி, மிதாலி ராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கும்.

இந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கெளர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அணி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

இந்திய அணியின் விவரம்:

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கெளர், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஷ்த், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ், பூனம் ராவத், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜெமிமா ரோட்ரிகஸ்,

ஜுலன் கோஸ்வாமி, தீப்தி சர்மா, ஷிக்ஷா பாண்டே, மோனா மேஷ்ராம், பூஜா வஸ்த்ரகர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா