இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸில் அடுத்த சுற்றில் கால்பதித்த இந்திய வீரர்கள்…

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸில் அடுத்த சுற்றில் கால்பதித்த இந்திய வீரர்கள்…

சுருக்கம்

Indian soldiers in the next round of the Indonesian Open Super Series

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் அடுத்த சுற்றில் கால்பதித்தனர்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் பிரணாய் மற்றும் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா மோதினர்.

இதில், 21-13, 21-18 என்ற நேர் செட்களில் சினிசுகாவை தோற்கடித்து வென்றார் பிரணாய்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வாங் விங் கீ வின்சென்டுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வின்சென்டை தோற்கடித்து வெற்றிப் பெற்றார் ஸ்ரீகாந்த..

இருவரும் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!
"அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!" – வைபவ்வுக்காக சங்கக்காரா போட்ட ‘தடை’ உத்தரவு!