
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 3ஆவது நாளான இன்று ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், தகுதிச் சுற்று போட்டியில் 60 ஷாட்டுகளில் 630.1 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்த இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பதக்கத்திற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் அர்ஜூன் பாபிதா 208.4 புள்ளிகள் பெற்று 4ஆவது இடம் பிடித்து வெளியேறியுள்ளார்.
கடைசி ஷாட்டில் 9.5 புள்ளிகள் பெற்ற நிலையில் டாப் 3ல் இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். எனினும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று மகளிருக்கான மற்றொரு போட்டியில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
அதுமட்டுமின்றி கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜோடி மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று 3ஆவது ஜோடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்காக போட்டி போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.