26ஆவது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி!

Published : Nov 22, 2023, 07:48 PM ISTUpdated : Dec 14, 2023, 08:40 AM IST
26ஆவது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி!

சுருக்கம்

IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கத்தார் நாட்டின் தோஹாவில் IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்திய வீரர்களான சவுரவ் கோத்தாரி மற்றும் பங்கஜ் அத்வானி இருவரும் மோதின. இந்தப் போட்டியில் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்று 26ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி, உலக பில்லியர்ட்ஸ் Long-Up வடிவ போட்டியில் 9ஆவது முறையாக பட்டம் வென்றார். அதே போன்று பாயிண்ட்ஸ் வடிவ போட்டிகளில் 8 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். இது தவிர, ஒருமுறை சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தாரர்.

லக்னோ அணிக்கு டாட்டா காட்டி விட்டு மீண்டும் கேகேஆர் அணியில் இணைந்த கவுதம் காம்பீர்!

இந்த நிலையில் தான் கத்தாரில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அரையிறுதிப் போட்டிகளில் ரூபேஷ் ஷாவை 900-273 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். இதே போன்று, துருவ் சித்வாலாவை 900-756 புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சவுரவ் கோத்தாரியை தோற்கடித்து  IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலமாக 26ஆவது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியோடு நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ் – வரவேற்க ரசிகர்கள் இல்லை – வைரலாகும் வீடியோ!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி