
ஆசிய குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர்களான சதீஷ் குமார், மணீஷ் பன்வார், மனோஜ் குமார், கவிந்தர் சிங் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
ஆசிய குத்துச்சண்டை போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் சதீஷ் குமார் 91 கிலோ எடைப் பிரிவின் காலிறுதியில் கஜகஸ்தானின் கம்ஷிபெக்கிடம் மோதினார்
இதில், கம்ஷிபெக், சதீஷ் குமாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியின், இந்திய வீரரான மணீஷ் பன்வார் 81 கிலோ எடைப் பிரிவின் காலிறுதியில் துர்க்மேனிஸ்தானின் நூர்யாக்டியுடன் மோதி, அதில் தோல்வி கண்டார்.
மற்ற இந்தியர்களான மனோஜ் குமார் 69 கிலோ எடைப் பிரிவிலும், கவிந்தர் சிங் 49 கிலோ எடைப் பிரிவிலும் தோல்விகண்டு தங்களின் பயணத்தை காலிறுதியிலேயே முடித்துக் கொண்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.