
இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு வளைகோற் பந்தாட்ட போட்டி வரும் 11-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்தப் போட்டி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான கோப்பையை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் மகேஷ் குமார் ஜெயின் அறிமுகப்படுத்தினார்.
அப்போது இது தொடர்பாக கூறியது:
“இந்தப் போட்டி 6 நாள்கள் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இதில் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, தெற்கு ரயில்வே, ஐசிஎப், தமிழ்நாடு காவல்துறை, வருமான வரித்துறை, சென்னை மாநகர காவல்துறை, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய கலால் வரித்துறை, ஹாக்கி அகாதெமி, கணக்குத் தணிக்கைத் துறை அலுவலகம் (ஏஜிஎஸ்), லயோலா கல்லூரி ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகக்கு கோப்பையுடன் ரூ.30 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகக்கு கோப்பையுடன் ரூ.20 ஆயிரம் வழங்கப்படவுள்ளன.
இது தவிர ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளும் வழங்கப்படவுள்ளன” என்றுக் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.