Paris 2024: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

Published : Jul 28, 2024, 02:48 PM IST
Paris 2024: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

சுருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆம் நாளான இன்று பிற்பகல் 12.50 மணிக்கு பேட்மிண்டன் குரூப் ஸ்டேஜ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, மாலத்தீவைச் சேர்ந்த பாத்திமத் நபாஹா அப்துல் ரஸ்ஸாக்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் பிவி சிந்து 21-19 மற்றும் 21-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜடேஜாவிற்கு பிறகு டீமுக்கு கிடைத்த பொக்கிஷம்: 1.2 ஓவரில் 3 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக காட்டிய ரியான் பராக்

 முதல் செட்டை 13 நிமிடங்களில் முடித்த சிந்து, 2ஆவது செட்டை வெறும் 14 நிமிடங்களில் முடித்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுவரையில் இந்திய அணி பதக்க வேட்டையை தொடங்கவில்லை. எனினும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் மனு பாக்கர் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்ன் நதிக்கரையில் நடைபெற்ற பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவிற்காக பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தேசிய கொடி அணிவகுப்பு நிகழ்த்தினார்.

பிளே ஆப் உறுதி செய்த அணிகள் – ஒருவழியாக உள்ளே நுழைந்த அஸ்வினின் திருப்பூர் தமிழன்ஸ்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..