உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தியா வெளியேற்றம்... 

Asianet News Tamil  
Published : May 24, 2018, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தியா வெளியேற்றம்... 

சுருக்கம்

India withdraws from Uthar Cup Badminton competition

 
உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிரணி ஜப்பானிடம் 0-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதன் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் ஜப்பானின் அகானே யமாகுசி மோதினர்.

இதில், 19-21, 21-9, 20-22 என்ற செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அகானே யமாகுசியிடம் வீழ்ந்தார் சாய்னா.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் அருணா பிரபுதேசாய் 12-21, 17-21 என தோற்கடிக்கப்பட்டார்.

அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சன்யோகிதா கோர்படே - பிரஜக்தா சாவந்த் இணை 15-21, 6-21 என்ற செட்களில், உலகின் 4-ஆம் நிலை இணையான அயாகா டகாஹாஷி - மிசாகி மட்சுடோமோ இணையிடம் வீழ்ந்தது.

இரட்டையர் பிரிவு 2-வது ஆட்டத்தில் வைஷ்ணவி பாலே - மேகானா ஜக்கம்புடி இணை 8-21, 17-21 என வீழ்ந்தது. 

உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட இந்திய இளம் வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்கா, 10-21, 03-21 என்ற செட்களில் வீழ்ந்தார். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்