விராட் கோலியின் அபார சதத்தால் மீண்ட இந்தியா..! நியூசிலாந்து அணிக்கு 281 ரன்கள் இலக்கு..!

Asianet News Tamil  
Published : Oct 22, 2017, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
விராட் கோலியின் அபார சதத்தால் மீண்ட இந்தியா..! நியூசிலாந்து அணிக்கு 281 ரன்கள் இலக்கு..!

சுருக்கம்

india newzealand first oneday match

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 281 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேதர் ஜாதவும் 12 ரன்களில் வெளியேறினார்.

மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கேப்டன் விராட் கோலி தினேஷ் கார்த்திக் ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 37 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தோனியும் சோபிக்க தவறினார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 31-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட கேப்டன் கோலி, 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் சவுதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்