
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோல் மோதினர்.
இதில், 22-20, 21-13 என்ற செட் கணக்கில் நிட்சாவ்ன் ஜின்டாபோலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நெவால்.
சாய்னா தனது காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுசியை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின் மோதினர்.
இதில், 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜியோன் ஹியோக் ஜின்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் தந்து காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் அக்ஸல்சனை எதிர்கொள்கிறார்.
மற்றொரு சுற்றில் ஒலிம்பிக்கில் மூன்று முறை வெள்ளி வென்ற மலேசியாவின் லீ சோங் வெயை 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய்.
பிரணாய் தனது அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை சந்திக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.