
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா – ஜெர்மணி அணிகள் மோதின.
இதில், இந்தியா 232-227 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது இந்தியா.
இந்த இந்திய அணியில் திரிஷா தேப், லில்லி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது இந்தியா.
இறுதிச்சுற்று குறித்து ஜோதி சுரேகா கூறியது:
"இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதியில் விளையாடியதைப் போன்றே அந்தச் சுற்றிலும் சிறப்பாக விளையாடுவோம்.
கொலம்பியா அணியும் சிறப்பாக விளையாடக் கூடியது. எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டம் விறு விறுப்பானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.