தொடக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா..!

 
Published : Dec 10, 2017, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா..!

சுருக்கம்

india loses 2 wickets earlier

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தரம்சாலாவில் இன்று நடந்துவருகிறது. கேப்டன் கோலி ஓய்வில் உள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷிகர் தவனும் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 

மேத்யூசின் பந்துவீச்சில், ரன் ஏதும் எடுக்காமல் ஷிகர் தவன் வெளியேறினார். லக்மலின் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ரோஹித், 2 ரன்னில் லக்மலின் பந்துவீச்சில் வெளியேறினார்.

6 ஓவரின் முடிவில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்து வருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயரும் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா