கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

Published : Aug 08, 2023, 06:57 AM IST
கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

சுருக்கம்

தென் கொரியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடந்த 3 ஆம் தேதி முதல் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. வரும் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றி உள்ளது.

Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?

இந்த நிலையில், 5ஆவது நாளாக நேற்று நடந்த போட்டியில் ஜப்பான் மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில், புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகள் மோதின. கடைசியாக பாகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் முதல் வெற்றியாகும்.

யாரை கழற்றிவிட்டு, யார சேர்த்திருக்காங்க தெரியுமா? உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

இதையடுத்து நடந்த கடைசி போட்டியில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 6ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் நீலகண்ட சர்மா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 12 ஆவது நிமிடத்தில் கொரிய வீரர் ஸுங்ஹ்யுன் கிம் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு 23 ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2ஆவது கோல் அடித்தார். இதையடுத்து முதல் அரை மணி நேரம் முடிந்து 2ஆவது அரை மணி நேரம் ஆரம்பமானது. அதில், மந்தீப் சிங் 3ஆவது கோல் அடித்தார்.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

இதன் மூலமாக இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர், சுதாரித்துக் கொண்ட கொரிய வீரர் ஜிஹுன் யாங் 58ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக போட்டி நேரம் முடிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
6 மாதமாக மதுபானத்தை தொடாத இந்திய வீரர்.. மீண்டும் அணிக்கு திரும்புவேன் என சபதம்!