112 ரன்களுக்கு சுருண்டது இந்தியா..! இலங்கைக்கு எளிய இலக்கு..!

Asianet News Tamil  
Published : Dec 10, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:34 AM IST
112 ரன்களுக்கு சுருண்டது இந்தியா..! இலங்கைக்கு எளிய இலக்கு..!

சுருக்கம்

india all out for 112

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 112 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.

தர்மசாலாவில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவனும் கேப்டன் ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி, இலங்கை அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணிக்கு தோனி-குல்தீப் யாதவ் ஜோடி சற்று ஆறுதல் அளித்தது. குல்தீப் யாதவும் ஸ்டம்பிங்கில் வெளியேற, மறுமுனையில் சுதாரிப்பாக தோனி, அரைசதம் கடந்தார்.

இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை துளிர்விட, தோனியுடன் ஆடிக்கொண்டிருந்த பும்ரா அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தோனியும் அவுட்டானார்.

38.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி, 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய லக்மல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. ரோகித், கோலி சாதனையை தூள் தூளாக்கிய ஃபின் ஆலன்.. வரலாற்று சாதனை!
ஃபின் ஆலன் சூறாவளியில் சிக்கிய SA.. 33 பந்துகளில் சதம் விளாசி சாதனை.. கெத்தாக பைனலில் நியூசிலாந்து!