Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி – பிளே ஆஃப் சேப்டர் குளோஸ் - நடையை கட்டும் நேரம் வந்துவிட்டது!

Published : Feb 05, 2024, 12:47 PM IST
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி – பிளே ஆஃப் சேப்டர் குளோஸ் - நடையை கட்டும் நேரம் வந்துவிட்டது!

சுருக்கம்

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது, 12 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளைத் தொடர்ந்து தபாங் டெல்லி, ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

IND vs ENG 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து – இன்னும் 205 ரன்கள் தேவை!

தெலுகு டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 12ஆவது இடம் பிடித்து எலிமினேட்டாகியுள்ளது. இந்த அணிகள் தவிர, பெங்களுரூ புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ளன. இனி வரும் போட்டிகளில் இந்த அணிகள் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சில அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் அணிகளில் மாற்றம் ஏற்படும்.

இந்திய அணியின் எதிர்காலமே யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தான் – வீரேந்திர சேவாக் பாராட்டு!

ஒரு அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்க வேண்டும். தற்போது புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணியானது 40 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ், யு மும்பா, பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய 4 அணிகளால் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோக வாய்ப்பு இருந்தது.

IND vs ENG Test: வெற்றியை நோக்கி டிராவல் பண்ணும் இங்கிலாந்து: முட்டுக்கட்டை போடும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

அதன்படி நேற்றைய போட்டியில் நடந்துள்ளது. நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 105ஆவது போட்டி நடந்தது. இதில், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள குஜராத் அணியானது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய தமிழ் தலைவாஸ் அணியானது கடைசி வரை போராடவே 30 புள்ளிகள் மட்டுமே பெற்றது. ஆனால், குஜராத் ஜெயிண்ட்ஸ் 42 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

இதன் மூலமாக தமிழ் தலைவாஸ் அணியானது 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேலும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் தான்.

சுப்மன் கில்லின் சதம் – இங்கிலாந்துக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டீம் இந்தியா!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்