
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 45-23 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 52-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற வேண்டியது. மழை காரணமாக ஒத்தி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய குஜராத் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 24-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து அசத்தலாக ஆடி குஜராத் அணி 45-23 என்ற கணக்கில் யு-மும்பாவை அதிரடியாக வீழ்த்தியது.
குஜராத் தரப்பில் அதன் ரைடர்கள் சந்திரன் ரஞ்சித் 11 புள்ளிகளையும், சச்சின் 10 புள்ளிகளையும் கைப்பற்றினர்.
யு-மும்பா தரப்பில் அதன் கேப்டன் அனுப் குமார் 7 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 9-வது வெற்றியைப் பெற்று 56 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில் யு-மும்பா அணி 15 ஆட்டங்களில் விளையாடி 8-வது தோல்வியைச் சந்தித்து 39 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.