இதுக்குத்தான்… இதுக்குத்தான் அவர ரொம்ப பிடிக்கும் … ரோகித் சர்மாவை பாராட்டித் தள்ளிய கவாஸ்கர் !!

By Selvanayagam PFirst Published Sep 24, 2018, 1:45 PM IST
Highlights

கேப்டன் பதவியில் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக , இந்திய சிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டித் தள்ளியுள்ளார்.

ஆசியா கோப்பை சீசன் 14 தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் விளையாடி வரும் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயலபட்டு வருகிறார். இது வரை நடைப்றற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியை அவர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
 

இதனிடையே  கேப்டன் ரோகித் சர்மாவை , கவாஸ்கர் பாராட்டித் தள்ளியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டன் பதவியில் ரோகித் சர்மாவின் செயல்பாடு என்னை எப்பொழுதும் கவர்ந்து இருக்கிறது என தெரிவித்தார்.

 ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை முதல்முறையாக ஏற்ற அவர் அந்த சீசனில் அணியை கோப்பையை வெல்ல வைத்தார். களத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்பதை அவர் நன்கு அறிந்து செயல்படுகிறார். 

இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்கும்போதெல்லாம் அவர் தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை போட்டி தொடரில் கேப்டன் பதவியில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ரோகித் சர்மா நன்றாக செயல்பட்டு வருகிறார் என கவாஸ்கர் பாராட்டித் தள்ளியுள்ளார். 

ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியில் இடம் பிடிக்க தகுதி படைத்தவர். அக்‌ஷர் பட்டேலை விட அவர் சிறந்த பவுலர், பேட்ஸ்மேன், பீல்டர் ஆவார் என்றும் கவாஸ்கர் தெரிவித்தார்

click me!