தோனி ஒரு ஆளால இருக்குற எல்லாருக்கும் பிரச்னை!! அவர கூட்டிகிட்டு போனா உலக கோப்பைல மண்ண தான் கவ்வணும்

By karthikeyan VFirst Published Dec 4, 2018, 4:59 PM IST
Highlights

ஒருநாள் அணியில் அவருக்கான இடம் நிரந்தரமாக இருக்கிறது என்பதால் அவர், அலட்சியமாக இருந்துவிட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாலியாக ஒருநாள் அணியில் இடம்பெற்று ஆடுவார். அவருக்காக மற்ற வீரர்கள் வழிவிட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு தொடர் பயிற்சி அவசியம். விளையாண்டு கொண்டே இருந்தால்தான் ஃபார்மில் இருக்க முடியும். ஆனால் தோனி உள்நாட்டு போட்டியில் ஆடுவதை தவிர்த்துவருகிறார். உள்நாட்டு போட்டிகளில் ஆடி ஃபார்முக்கு வருவதை விடுத்து, வீட்டில் மகளுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். 

தோனி உள்நாட்டு போட்டிகளில் ஆடாததை ஏற்கனவே விமர்சித்திருந்த கவாஸ்கர், மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார். 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

அதிலும் அண்மைக்காலமாக டி20 போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 போட்டியில் சேர்க்கப்படவில்லை. எனவே ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். மற்ற போட்டிகளில் ஆடுவதேயில்லை. அதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகே போட்டிகளில் ஆடிவருகிறார். ஏற்கனவே ஃபார்மில்லாமல் தவித்துவரும் தோனி, குறைவான போட்டிகளில்தான் ஆடிவருகிறார். 

ஆனால் அவர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் ஆட இருப்பதால், அதற்குள் ஃபார்முக்கு வந்து சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். எனவே பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கும் விதமாக விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும். அதன்மூலம் பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கலாம். அது அவரது பேட்டிங் மேம்பட உதவும் என்று ஏற்கனவே கவாஸ்கர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் கவாஸ்கரின் பேச்சை சற்றும் மதிக்காத தோனி, விஜய் ஹசாரே தொடரில் ஆடவில்லை. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட்  அணிகளில் இல்லாத தோனி, சுமார் இரண்டரை மாதமாக சும்மாவே இருந்துவிட்டு அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு நேராக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடினால் அவரால் எப்படி நன்றாக ஆட முடியும்? கண்டிப்பாக ஆட முடியாது.

ஆனால் ஒருநாள் அணியில் அவருக்கான இடம் நிரந்தரமாக இருக்கிறது என்பதால் அவர், அலட்சியமாக இருந்துவிட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாலியாக ஒருநாள் அணியில் இடம்பெற்று ஆடுவார். அவருக்காக மற்ற வீரர்கள் வழிவிட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு தொடர் பயிற்சி அவசியம். விளையாண்டு கொண்டே இருந்தால்தான் ஃபார்மில் இருக்க முடியும். ஆனால் தோனி உள்நாட்டு போட்டியில் ஆடுவதை தவிர்த்துவருகிறார். உள்நாட்டு போட்டிகளில் ஆடி ஃபார்முக்கு வருவதை விடுத்து, வீட்டில் மகளுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். 

சீனியர் வீரர், அனுபவ வீரர் என்பதையெல்லாம் கடந்து சர்வதேச அணியில் ஆடும் வீரர், நல்ல ஃபார்மில் ஆடவேண்டும் என்பதுதான் அவசியம். ஆனால் தோனி என்பதற்காக மட்டுமே அவர் அணியில் நிரந்தர இடம் பிடித்துவிடுகிறார். இது வளர்ந்துவரும் இளம் வீரர்களுக்கு தடையாக இருக்கிறது. அவர் நன்றாக ஆடினால் அவரை யாருமே கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால் சரியாக ஆடாத பட்சத்தில், சீனியர் வீரராக இருந்தாலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உள்நாட்டு போட்டிகளை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை செய்ய தோனி மறுக்கிறார்.

இந்நிலையில், தோனியும் தவானும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இல்லாத நிலையிலும் ரஞ்சி டிராபியில் ஆடவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், தோனியும் தவானும் மட்டும் என்ன விதிவிலக்கா? சர்வதேச போட்டிகளில் ஆடாதபோது அவர்கள் உள்நாட்டு போட்டிகளில் ஆடினால் என்ன? இந்த கேள்வியை நாம் தோனியையும் தவானையும் பார்த்து கேட்கக்கூடாது. அவர்களை ஆடாமல் இருக்க அனுமதிக்கும் பிசிசிஐ-யை பார்த்துத்தான் கேட்க வேண்டும். அவர்கள் உள்நாட்டு போட்டிகளில் ஆடி தங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏன் இல்லாமல் போய்விட்டது? என கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆடாத தோனி, கடைசியாக அக்டோபரில்தான் ஆடினார். அடுத்த மாதம் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரெடிமேடாக வருவார். இது மிகப்பெரிய இடைவெளி. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் தோனி சரியாக ஆடவில்லை எனில் உலக கோப்பைக்கு அவரை தேர்வு செய்தால் அது மிகப்பெரிய தர்மசங்கடமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதே மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். 
 

click me!