
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் மற்றும் டெல் போட்ரோ அரையிறுதியின் இன்று மோதுகின்றனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் முந்தைய நாள் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நேற்று தொடர்ந்து நடந்தன.
அதனொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 10 முறை சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை எதிர்கொண்டார்.
இதில், 4–6, 6–3, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் நடால்.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 7–6 (5), 5–7, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதியை எட்டியுள்ள டெல் போட்ரோ அடுத்து ரபெல் நடாலுடன் இன்று மோதுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.