
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெஸ்சன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012–ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வந்தவர் மைக் ஹெஸ்சன் (43). தற்போது இவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ஜூலை 31–ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஓவர்உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மைக் ஹெஸ்சன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைக் ஹெஸ்சன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு, "பயிற்சியாளர் பதவியில் 100 சதவீத அர்ப்பணிப்புடன் முழு நேரத்தையும் செலவிட வேண்டியது அவசியமானதாகும்.
எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதால் அடுத்த 12 மாதத்துக்கு பயிற்சியாளர் பதவியில் இருக்க நான் விரும்பவில்லை. அடுத்த 12 மாதத்துக்கு அணிக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும். அதற்கு நான் தகுதியானவர் இல்லை என்று கருதுவதால் விலகல் முடிவை எடுத்தேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.