ஆக்ரோஷமான கோலி.. அபராதம் விதித்த ஐசிசி

Asianet News Tamil  
Published : Jan 16, 2018, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஆக்ரோஷமான கோலி.. அபராதம் விதித்த ஐசிசி

சுருக்கம்

fine for indian captain virat kohli

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட விராட் கோலிக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்துவருகிறது. 

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களும் இந்தியா 307 ரன்களும் எடுத்தன. நான்காவது நாள் ஆட்டம் இன்று நடந்துவருகிறது. மூன்றாவது நாளான நேற்று தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மழை வந்தது. மழை நின்ற பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் மைதானத்திற்கு வந்தபோது, மைதானம் ஈரப்பதமாக இருந்ததை கண்ட கேப்டன் விராட் கோலி, கோபமடைந்தார். ஆக்ரோஷமாக பந்தை மைதானத்தில் வீசி எறிந்ததோடு, இதுதொடர்பாக போட்டி நடுவரிடம் முறையிட்டார்.

ஐசிசி விதிப்படி இதுபோன்று ஆக்ரோஷமாக நடந்துகொள்ள கூடாது. அதனால் ஐசிசி விதிகளை மீறி ஆக்ரோஷமாக செயல்பட்ட விராட் கோலிக்கு சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அபராத புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!