
டைமண்ட் லீக் தடகள போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடந்துவருகின்றன. இந்த டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். அப்போது காயமடைந்ததால், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிங்க - விராட் கோலி சதம்.. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்..! ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி
ஆனால் காயத்திலிருந்து மீண்டு கடும் பயிற்சி மேற்கொண்ட நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டில் 90 மீ தூரம் வீசுவதே தனது இலக்கு என்றார். அதற்காக கடுமையாகவும் உழைத்தார்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் தடகள தொடரில் ஈட்டி எறிதல் ஃபைனலில், முதல் த்ரோவை ஃபவுலாக வீசிய நீரஜ் சோப்ரா, 2வது முயற்சியில் செம கம்பேக் கொடுத்த நீரஜ் சோப்ரா, 88.44மீ தூரம் வீசினார். அதன்பின்னர் கடைசி 2 முயற்சிகளிலும் அதைவிட குறைவான தூரமே வீசினார் என்றாலும், 88.44 மீ தூரம் வீசியதால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி
டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.