
இந்திய வீரர் ஷிகர் தவானின் டிரேட் மார்க்காக அறியப்படுவது, கேட்ச் பிடித்தவுடன் அவர் தொடையை தட்டுவதுதான். அதற்கான காரணத்தை ஷிகர் தவான் விளக்கியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். விக்கெட்டுகள் வீழ்த்தும்போதும் கேட்ச்களை பிடிக்கும்போதும் ஒவ்வொரு வீரரும் தங்களுகே உரிய பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதேபோல, ஷிகர் தவானின் டிரேட் மார்க்காக அமைந்தது தான் அவர் தொடையை தட்டும் செயல்.
அதுவும் பவுண்டரி கோட்டின் அருகே கேட்ச் பிடித்துவிட்டு ரசிகர்களை நோக்கி தொடையை தட்டி கொண்டாடுவதை ரசிகர்கள் ஆர்ப்பரித்து ரசிப்பர். அவர் தொடையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷிகர் தவான், தனக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்பதால், அதே பாணியில் தொடையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். அது ரசிகர்களுக்கு பிடித்துப்போக அதை அப்படியே தொடர்ந்துவிட்டார் தவான்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.