ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டி…. சிஎஸ்கே அணிக்கு 166 ரன்கள் இலக்கு….

First Published Apr 7, 2018, 10:02 PM IST
Highlights
chennai vs mumbai ipl cricket target 166 runs to csk


11 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணிக்கு மும்பை அணி 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடைசி 3 ஓவர்களில்  பாண்ட்யா சகோதரர்கள் மிகச் சிறப்பாக சிளையாடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’ அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15 மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார்.  பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில்,  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.   2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பரம எதிரியான மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 40, சூர்யகுமார் யாதவ் 43, க்ருணால் பாண்டியா 41* ரன்கள் விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து சிஎஸ்கே அணி தற்போது விளையாடி வருகிறது. இதில் சென்னை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

click me!