சென்னையை சேர்ந்த இந்திய வீரருக்கு அசத்தல் வெற்றி; முதல் முறையாக ஆடும் போட்டியில் அபாரம்...

 
Published : Jun 14, 2018, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
சென்னையை சேர்ந்த இந்திய வீரருக்கு அசத்தல் வெற்றி; முதல் முறையாக ஆடும் போட்டியில் அபாரம்...

சுருக்கம்

Chennai Indian player won first time participate in tennis competition

ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் சென்னையை சேர்ந்த இந்திய வீரர் குணேஸ்வரனின் அசத்தல் வெற்றி பெற்றார்.

மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வருகிறது. 

இதில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 169-வது இடம் வகிப்பவரும், தகுதி நிலை வீரருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 23-ஆம் நிலை கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார். 

ஒரு மணி 48 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 7-6 (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவுக்கு அதிர்ச்சி அளித்தார். 

ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 

இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவை வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!