
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சோனியா லேதர் ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்றிருந்த இதர 5 இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினர்.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதியில் ஜப்பானின் சுபாசா கோமுராவுடன் மோதினார். இதில், 5-0 என்ற கணக்கில் மேரி கோம் வெற்றிப் பெற்றார்,
அவர் தனது இறுதிச்சுற்றில் வடகொரியாவின் கிம் ஹையாங் மியை எதிர்கொள்கிறார்.
இதேபோல், மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சோனியா லேதர் தனது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் யோத்கோராய் மிர்ஸவாவை வீழ்த்தினார்.
இறுதிச்சுற்றில் அவர் சீனாவின் யின் ஜுன்ஹுவாவை புதன்கிழமை எதிர்கொள்கிறார்.
ஆனால், 64 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சரிதா தேவி, அரையிறுதியில் சீனாவின் டெள டானிடம் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.
அதேபோன்று 54 கிலோ பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சிக்ஷாவை, சீன தைபேவின் லின் யு டிங் அரையிறுதியில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டமான 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பிரியங்கா செளதரி, தென் கொரியாவின் ஒஹ் யோஞ்சியிடம் அரையிறுதியில் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.
அதேபோன்று 69 கிலோ பிரிவு அரையிறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், கஜகஸ்தானின் வாலென்டினா கால்சோவாவிடமும், 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு அரையிறுதியில் சீமா பூனியா, கஜகஸ்தானின் குஸல் இஸ்மடோவாவிடமும் வீழ்ந்து வெண்கலத்தோடு வெளியேறினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.