
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆறு தங்கங்கள் உள்பட 20 பதக்கங்கள் பெற்று நிறைவு செய்துள்ளது.
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் மூன்று பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்யேந்திர சிங் தங்கமும், சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளியும் வெற்றிப் பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கு சத்யேந்திர சிங் மற்றும் சஞ்சீவுடன் செயின் சிங்கும் தகுதிபெற்றிருந்தார். தொடக்க நிலையில் செயின் சிங் 3-வது இடத்தில் இருக்க, மூன்று பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சீவ் ராஜ்புத் 453.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் டேன் சாம்சன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆடவருக்கான 'டிராப்' பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் பீரேந்தீப் சோதி, அதில் 4-வது இடம் பிடித்தார்.
இந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்க: என மொத்தம் 20 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.