
சீன நாட்டில் உள்ள ஹாங்சு நகரில் வருகின்ற செப்டம்பர் மாதம் 23ம் தேதி துவங்க இருக்கிறது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்சிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய கால்பந்தாட்ட அணியின் 22 பேர் கொண்ட வீரர்களுடைய பட்டியலை தற்போது தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலின் படி 22 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்
குருப்ரீத் சிங் சந்து, குருமீட் சிங், திராஜ் சிங், ஜிக்சன் சிங், சுரேஷ் சிங், அமர்ஜித் சிங் கியாம், மகேஷ் சிங், அன்வர் அலி, ரோகித் தனு, ரஹீம் அலி உள்ளிட்ட பல வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் இதில் சிறப்பு அம்சமாக தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் இந்திய கால்பந்தாட்ட அணியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியானது பொதுவாக 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாகும், ஆனால் இம்முறை இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஓராண்டு கால தாமதம் ஏற்பட்டதால், 24 வயதுடையவர்களை, கட்-ஆஃப் பிறந்த தேதியுடன் பங்கேற்க ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.