
பாரிஸ் 2024 ஒலிம்பிக் 2024 தொடரின் 8ஆவது நாள் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, படகு போட்டி, கோல்ஃப் போட்டிகள் நடத்தப்பட்டன. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதே போன்று வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் தான் இன்று பிற்பகல் ஆண்களுக்கான 2ஆவது நாள் ஸ்கீட் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.
முகமது சிராஜ் மற்றும் நிகத் ஜரீனுக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்கும் மசோதா நிறைவேற்றம்!
இதில், இந்தியா சார்பில் அனந்த்ஜீத் சிங் நருகா போட்டியிட்டார். இதில், அவர், 116 புள்ளிகள் பெற்று 24ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முதல் 6 இடங்களை பிடித்திருக்க வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த சிஎல் பிரின்ஸ் 124 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் நருகா 6 புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இதே போன்று முதல் நாளுக்கான மகளிருக்கான ஸ்கீட் தகுதிச் சுற்று போட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் இந்தியா சாரில் மகேஷ்வரி சவுகான் மற்றும் ரைசா தில்லான் இருவரும் போட்டியிட்டனர். இதில் மகேஷ்வரி 71 புள்ளிகள் பெற்று 8ஆவது இடம் பிடித்தார். இதே போன்று ரைசா தில்லான் 66 புள்ளிகள் பெற்று 25ஆவது இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து 2ஆவது நாள் போட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.