ஊக்கமருந்து பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஒரு வருடம் விளையாட தடை...

 
Published : Dec 08, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
ஊக்கமருந்து பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஒரு  வருடம் விளையாட தடை...

சுருக்கம்

Afganistan cricketer used for doping

ஊக்கமருந்து பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாஸாத்-க்கு ஓராண்டு தடை விதித்துள்ளது ஐசிசி.

முகமது ஷாஸாத் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், அதே எண்ணிக்கையிலான டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"ஐசிசி விதிகளின் கீழ், ஊக்கமருந்து பரிசோதனைக்காக விக்கெட்கீப்பர் - பேட்ஸ்மேனான முகமது ஷாஸாத்திடம் இருந்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தது.

அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின்படி, அவரது உடலில் கிளென்பியுடெரோல் என்ற மருந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இது, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் (வாடா) தடைசெய்யப்பட்ட ஒரு மருந்தாகும். தனது இந்த விதிமீறலை ஷாஸாத் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஓராண்டுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடைக்காலமானது, அவரிடமிருந்து மாதிரி பெறப்பட்ட 2017 ஜனவரி 17 தேதியில் இருந்து கணக்கிடப்படும். அதன்படி, 2018 ஜனவரி 17-ஆம் தேதி முதல் அவர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்" என்று ஐசிசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, உடல்எடை குறைப்புக்காக தான் எடுத்துக்கொண்ட மருந்தில், தடைசெய்யப்பட்ட மருந்துக் கலப்பு இருந்ததாகவும், தான் வேண்டுமென்றே அந்த மருந்தை பயன்படுத்தவில்லை எனவும் முகமது ஷாஸாத் அளித்த விளக்கத்தை ஐசிசி ஏற்றுக் கொண்டுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!