12-வது சாஃப் கால்பந்து போட்டி - பி பிரிவில் இடம் பெற்றத் இந்தியா...

Asianet News Tamil  
Published : Apr 19, 2018, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
12-வது சாஃப் கால்பந்து போட்டி - பி பிரிவில் இடம் பெற்றத் இந்தியா...

சுருக்கம்

12th SAF Football Competition - India in the B category

12-வது தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டியில் இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 4 முதல் 15-ஆம் தேதி வரை சாஃப் கோப்பை கால்பந்து போட்டி மூன்றாவது முறையாக வங்கதேசத்தில் நடக்கிறது. 

குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பூடான் நாடுகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

ஏழு முறை சாம்பியனான இந்தியா கடந்த 2015-ல் நடந்த இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது. 

டாக்காவில் உள்ள நேஷனல் விளையாட்டரங்கில் அனைத்துப் போட்டிகளும் நடக்கின்றன. 

தற்போது 12-வது சாஃப் கால்பந்து கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

கிரிக்கெட் உலகை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷி! 175 ரன்கள், 15 சிக்ஸர்கள்.. இளம் வயதில் முறியடிக்கப்பட்ட 5 மெகா சாதனைகள்!
6-வது முறை உலகக்கோப்பை மகுடம்! இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா.. U19 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!