ஒரே இன்னிங்ஸில் எனது வாழ்நாள் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டார் – அலெஸ்டர் குக்!

Published : Feb 19, 2024, 03:51 PM IST
ஒரே இன்னிங்ஸில் எனது வாழ்நாள் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டார் – அலெஸ்டர் குக்!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக தனது 11 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.

ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுப்மன் கில் 91 ரன்கள் சேர்த்து ரன் அவுட் செய்யப்பட்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு கர்ட் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆண்டர்சன் ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி, 12 சிக்ஸர்கல் உள்பட 214 ரன்கள் குவித்து ஒரே சீரிஸில் இங்கிலாந்திற்கு எதிராக 2ஆவது முறையாக இரட்டை சதம் விளாசினார். இவ்வளவு ஏன், 90 பவுண்டரி, 25 சிக்ஸர்கள் மூலமாக 510 ரன்கள் குவித்துள்ளார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் 861 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், ஜெய்ஸ்வால் குறித்து குறித்து கூறியுள்ளார். அதில் நான் எனது வாழ்வில் அடித்த ஒட்டு மொத்த சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார் என்று பெருமையாக கூறியுள்ளார்.அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்ஸர்கள் மட்டுமே விளாசியுள்ளார். 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..
IND vs SA 3வது ODI: ரோஹித் சர்மா புதிய உலக சாதனை; சச்சின்-லாரா கிளப்பில் இணைந்த ஹிட்மேன்..!