டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள்..! புவனேஷ்வர் குமாருக்கே இடம் இல்ல

Published : Apr 24, 2022, 04:35 PM IST
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள்..! புவனேஷ்வர் குமாருக்கே இடம் இல்ல

சுருக்கம்

ஐபிஎல்லில் இந்தியாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பலர் அசத்திவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு ஐபிஎல்லை இளம்வீரர்கள் பலரும் அருமையாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. டி20 உலக கோப்பை ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நடப்பதால், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டைத்தான் மிகவும் கவனமாக சிறந்தவர்களை தேர்வு செய்ய வேண்டிய கடமை இந்திய அணிக்கு உள்ளது.

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூன்று சீனியர் பவுலர்களும் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில், இந்த சீசனில் மற்றொரு சீனியர் பவுலரான உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசிவருகிறார். ஹர்ஷல் படேல், டி.நடராஜன் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி தாங்கள் சார்ந்த அணிகளுக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகின்றனர். சன்ரைசர்ஸ் அணியில் ஆடும் உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி மிரட்டிவருகிறார்.

இவர்கள் தவிர, பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் தீபக் சாஹர், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

இப்படியாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ளனர்.

பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரையும் முதல் 2 பவுலர்களாகவும், காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் தீபக் சாஹர் திரும்பினால் அவர் தான் 3வது பவுலர் என்றும் கூறியுள்ள வாசிம் ஜாஃபர், முகமது ஷமி மற்றும் நடராஜன் ஆகிய இருவரையும் கடைசி 2 பவுலர்களாக தேர்வு செய்துள்ளார். நடராஜன் இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 2 விக்கெட்டுகளை வீழ்த்திவரும் நிலையில் அவரை கண்டிப்பாக இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று வாசிம்ஜாஃபர் கூறியுள்ளார்.

பும்ரா, ஷமி, தீபக் சாஹர் ஆகிய மூவரையும் முதல் 3 பவுலர்களாகவும் ஹர்ஷல் படேல், நடராஜன் ஆகியோருடன் இளம் மிரட்டல் வேகம் உம்ரான் மாலிக்கையும் தேர்வு செய்துள்ளார் நிகில் சோப்ரா.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஃபாஸ்ட் பவுலர்கள்:

பும்ரா, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், முகமது ஷமி, டி.நடராஜன்.

நிகில் சோப்ராவின் தேர்வு:

ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், டி.நடராஜன், உம்ரான் மாலிக்

வாசிம் ஜாஃபர், நிகில் சோப்ரா ஆகிய இருவர் தேர்வு செய்த அணிகளிலும் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் இல்லை.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: ஓமனை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா!
தோனி ஒரு சிறந்த வழிகாட்டி! எனது கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றிய அந்த ஒரு தருணம் - Shviam Dube பேச்சு!