பெரிய பெரிய பிளேயர்ஸ் இருக்குற டீம்ல தனித்து நின்று திறமையை நிரூபிச்சான் பாரு அதான் கெத்து..! சேவாக் புகழாரம்

By karthikeyan VFirst Published May 6, 2021, 9:07 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் அபாரமாக பந்துவீசி அசத்திய டெல்லி கேபிடள்ஸ் ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கானை வெகுவாக புகழ்ந்துள்ளார் வீரேந்திர சேவாக்.
 

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் பவுலர்களை விட புதுப்புது பேட்ஸ்மேன்கள் தான் பெரிதாக உருவெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியிலும் இடம்பிடிப்பார்கள். டி20 போட்டிகளே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். அதிலும் ஐபிஎல் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கானதாகவே திகழ்கிறது.

ஆனால் இந்த சீசனில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் கவனம் ஈர்த்தனர். அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத ஆவேஷ் கான், சேத்தன் சகாரியா, ஹர்ஷல் படேல் ஆகிய உள்நாட்டு பவுலர்கள் அருமையாக வீசி அதிக கவனம் ஈர்த்தனர். பும்ரா, போல்ட், ரபாடா ஆகிய சர்வதேச அளவிலான டாப் பவுலர்கள் ஐபிஎல்லில் ஆடியபோதிலும், அவர்களைவிட ஆவேஷ் கானும் ஹர்ஷல் படேலும் சகாரியாவுமே அபாரமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

ஆர்சிபி அணியில் ஆடிய ஹர்ஷல் படேல் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் 14வது சீசன் நடந்ததுவரை, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவராவது அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். நல்ல எகானமியிலும் பந்துவீசி 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, டெல்லி கேபிடள்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஆவேஷ் கான், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் 2ம் இடத்தில் உள்ளார்.

ரபாடா, அஷ்வின், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா என டாப் பவுலர்கள் இருக்கும் டெல்லி அணியில் தனது அபாரமான பவுலிங்கால் தனித்து தெரிந்த ஆவேஷ் கானை வெகுவாக புகழ்ந்துள்ளார் வீரேந்திர சேவாக்.

ஆவேஷ் கான் குறித்து பேசிய சேவாக், டெல்லி அணியில் ரபாடா, அஷ்வின், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா ஆகியோரை பற்றித்தான் நாம் பேசுவோம். யாருமே ஆவேஷ் கானை பற்றி பேசுவதில்லை. இந்த சீசனில் அசத்தியவர் அவர் தான். ஒவ்வொரு போட்டியிலும் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ஹர்ஷல் படேலுக்கு அடுத்து 2ம் இடத்தில் உள்ளார் என்று சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!