CSK vs RCB, IPL 2024: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையில் தன்னையே மெய்மறந்த விராட் கோலி!

Published : Mar 22, 2024, 10:46 PM IST
CSK vs RCB, IPL 2024: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையில் தன்னையே மெய்மறந்த விராட் கோலி!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உரையை கேட்டு ரசித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது.

இதில், தொடக்க வீரர் பாப் டூப்ளெசிஸ் 35 ரன்கள் குவித்தார். விராட் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த போது டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், 21 ரன்கள் எடுத்திருந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1006 ரன்கள் கடந்து சாதனை படைத்தார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி 11.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்திருந்த போது, தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 6ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.

இதன் மூலமாக ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. இதில், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அனுஜ் ராவத் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், தான் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டிக்கு நடுவில் விராட் கோலி டிரெஸிங் ரூமில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உரையை கேட்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வருகிறது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?