CSK vs RCB, IPL 2024:தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் அதிரடியால் ஆடிப்போன சிஎஸ்கே – ஆர்சிபி 173 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumarFirst Published Mar 22, 2024, 9:58 PM IST
Highlights

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். விராட் கோலி ஒரு ரன் எடுத்து இந்த சீசனை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு முழு கண்ட்ரோலையும் தன் வசப்படுத்திய பாப் டூப்ளெசிஸ் சிஎஸ்கே பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். ஆர்சிபி 3 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4.3ஆவது ஓவரில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சில் பாப் டூப்ளெசிஸ் 23 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து தீபக் சாஹர் பந்தில் கிளென் மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்த நிலையில் தான் இந்த போட்டியில் விராட் கோலில் 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரராக 12,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணிக்கு எதிராக 1006 ரன்களை கடந்து சாதனை படைத்தார். எனினும், அவர் 20 பந்துக்ளளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் 18 ரன்களில் வெளியேற அடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். முதலில் ஆர்சிபி 11.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் குவித்து ஆர்சிபிக்கு 173 ரன்கள் எடுத்து கொடுத்தனர்.

இதில், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று அனுஜ் ராவத் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் தோல்வியால் ரன் அவுட் செய்யப்பட்டார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தீபக் சாஹர் ஒரு விக்கெட் கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் வாரி கொடுத்துள்ளார்.

click me!