முடி வெட்டிக் கொண்டே நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டியை பார்த்த விராட் கோலி!

Published : Nov 05, 2023, 02:33 PM IST
முடி வெட்டிக் கொண்டே நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டியை பார்த்த விராட் கோலி!

சுருக்கம்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி முடி வெட்டிக் கொண்டே தனது மொபையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டியை மொபைலில் பார்த்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 37ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாதி பெயரை நீக்க வேண்டும்..! பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த கார்த்தி சிதம்பரம்

இந்த நிலையில் தான் நேற்று பெங்களூருவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 401 ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமான் நல்ல தொடக்கம் கொடுத்தார். ஜமான் 81 பந்துகளில் 8 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உள்பட 126 ரன்கள் குவித்தார்.

இந்த வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் முடிவில்லாமல் நான் உன்னை நேசிக்கிறேன் – அனுஷ்கா சர்மா!

போட்டியின் போது மழை பெய்த நிலையில், போட்டியானது 41 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் போட்டி நடந்தது. ஆனால், அப்போதும் மழை குறுக்கிடவே டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs SA: முதல் இடத்திற்கான ரேஸில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா; 35ஆவது பிறந்தநாளில் விராட் கோலி சாதிப்பாரா?

இந்த நிலையில்,தான் விராட் கோலி முடி வெட்டிக் கொண்டே மொபைல் போனில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!