
ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.
இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். தொடக்க வீரர்களாக இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. பட்லர் இந்த சீசனில் 863 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களைகுவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
3ம் வரிசையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனையும், 4ம் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், முதல் சீசனிலேயே கேப்டன்சியில் அனைவரையும் கவர்ந்து கோப்பையையும் வென்ற ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
5 மற்றும் 6ம் வரிசைகளில் லியாம் லிவிங்ஸ்டோன்(பஞ்சாப் கிங்ஸ்) மற்றும் டேவிட் மில்லர்(குஜராத் டைட்டன்ஸ்) ஆகிய இருவரையும் தேர்வு செய்தார். ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பராக ஆர்சிபியின் மேட்ச் வின்னராக ஜொலித்த தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தார்.
ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக ஹசரங்கா மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவன்:
ஜோஸ் பட்லர், கேஎல்ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.