அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை – ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி, 3 முறை தாமதமானால் 5 ரன் அபராதம்!

Published : Nov 22, 2023, 09:49 AM IST
அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை – ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி, 3 முறை தாமதமானால் 5 ரன் அபராதம்!

சுருக்கம்

ஒரு ஓவர் வீசி முடிந்ததும், அடுத்த ஓவர் வீச வருவதற்கு 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஒரு நாள் கிரிக்கெட், டி20, டெஸ்ட் போட்டிகளின் போது ஏதாவது ஒன்று புதிது புதிதாக நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்து ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் டைம் அவுட் முறை சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையான முறையில் ஒருவர் ஆட்டமிழக்கும் போது கள நடுவர் அவுட் கொடுத்து, மூன்றாவது நடுவரிடம் முறையிடும் முறை இருந்தது. ஆனால், அது அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. சர்ச்சையான முறையில் ஒருவர் ஆட்டமிழக்கும் போது கள நடுவர், மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்யலாம். ஆனால், கள நடுவர் அவுட் கொடுக்க தேவையில்லை என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

U19 உலகக் கோப்பை: இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை – தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றம் – ஐசிசி அதிரடி முடிவு!

இப்படி புதிய புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று அகமதாபாத்தில் நடந்த வாரியக் கூட்டத்தின் போது இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பந்து வீச்சாளர் ஒரு ஓவரை வீசி முடித்த பிறகு அடுத்த ஓவரை வீச வருவதற்கு 60 வினாடிகள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். அதாவது, ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் 3 முறை தாமதமானால் எதிரணிக்கு 5 ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.

இந்திய ரசிகர்கள் மீது பற்று கொண்டவர் – ரசிகர்களை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட வார்னர்!

இந்த விதிமுறையானது ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் சோதனை முறையில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

யார் இந்த தாஜி? ரோகித் சர்மாவிற்கும், மனைவி ரித்திகாவிற்கும் தியானம் கற்றுக் கொடுத்த ஆன்மீக குரு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs NZ: ஆல்ரவுண்டருக்கு மீண்டும் சான்ஸ்.. ருத்ராஜை விட இவர் திறமைசாலியா? விளாசும் நெட்டிசன்கள்!
ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பெங்களூரு சின்னசாமியில் ரன் மழைக்கு ரெடியா? குட் நியூஸ்!