தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளை பெற்றுள்ளன.
முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், அணியில் எந்த மாற்றமும் செய்யாமல், வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்ததால் தான், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியால் ஜெயிக்க முடிந்தது.
ஒபனிங்கில் இஷான் கிஷன், ஃபினிஷிங்கில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், சாஹல் ஆகியோர் அசத்திவருகின்றனர். அனைத்துவகையிலும் இந்திய அணி காம்பினேஷன் நன்றாக செட்டாகிவிட்டதால் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் 4 போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.
நாளை(ஜூன்19) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.
உத்தேச இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.