#IPL2021 போங்கடா நீங்களும் உங்க ஐபிஎல்லும்.. கடைசி நேரத்தில் திடீரென விலகிய சன்ரைசர்ஸ் ஆல்ரவுண்டர்

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 6:26 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான ஆஸி., ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதையொட்டி, அனைத்து அணிகளும் அதற்கான தீவிர தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஆஸி., ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல்லில் ஆடும் 2 மாத காலம் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பது சோர்வைத் தரும் என்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்திருக்கிறார்.

தனது முடிவை பிசிசிஐ மற்றும் சன்ரைசர்ஸ் அணியிடம் தெரிவித்துவிட்டார் மிட்செல் மார்ஷ். 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ரூ.2 கோடிக்கு மிட்செல் மார்ஷை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அந்த சீசன் முழுவதுமே அவர் ஆடவில்லை. இந்நிலையில், இந்த சீசனிலிருந்தும் விலகியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய மிட்செல் மார்ஷ், பிக்பேஷ் லீக்கிலும் சிறப்பாக ஆடினார். நல்ல ஆல்ரவுண்டரான மார்ஷ், கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க விருப்பமில்லாமல் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஒருவரை எடுக்க சன்ரைசர்ஸ் அணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!