#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அவர் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்..! இந்திய முன்னாள் வீரரின் கணிப்பு

Published : Mar 31, 2021, 04:00 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அவர் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்..! இந்திய முன்னாள் வீரரின் கணிப்பு

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகும் பவுலர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகும் பவுலர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த சீசன் இந்தியாவில் நடக்காத நிலையில், இந்த சீசன் இந்தியாவில் நடப்பதால், ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சீசனில் எந்த பவுலர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரஷீத் கான் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவருக்கு இது மிகச்சிறந்த சீசனாக அமையும். ஃபாஸ்ட் பவுலர்களை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா அசத்துவார்கள். 

நான் ஏன் ரஷீத் கான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்புகிறேன் என்றால், முதல் 5 போட்டிகளை அவர் சென்னையில் ஆடவுள்ளார். அதன்பின்னர் அடுத்த 4 போட்டிகளை டெல்லியில் ஆடுகிறார். எனவே லீக் சுற்றில் மொத்தம் 14 போட்டிகளில் 9 போட்டிகள் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் ரஷீத் கான் ஆடவுள்ளார். எனவே கண்டிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் ரஷீத் கான் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!
IND vs AFG Test: இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்தியா பிளேயிங் லெவன்! அறிமுக வீரர்களுக்கு ஜாக்பாட்!