செம இண்டெலிஜெண்ட் கிரிக்கெட்.. இந்திய இளம் வீரரை வெகுவாக புகழ்ந்த கவாஸ்கர்

Published : Mar 29, 2021, 10:45 PM IST
செம இண்டெலிஜெண்ட் கிரிக்கெட்.. இந்திய இளம் வீரரை வெகுவாக புகழ்ந்த கவாஸ்கர்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட் மூளையை பயன்படுத்தி ஸ்மார்ட்டாக ஆடியதாக கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.  

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், கெரியரின் தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது சொதப்பியதால், அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. அதனால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி, மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றார்.

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராகவும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதமடித்து, அதே தன்னம்பிக்கையுடன் டி20 கிரிக்கெட்டில் அசத்தினார்.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடாத ரிஷப் பண்ட், 2வது போட்டியில் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்களையும், 3வது போட்டியில் 62 பந்தில் 78 ரன்களையும் குவித்தார்.

முன்பெல்லாம், சூழலுக்கும் பந்துக்கும் ஏற்ப ஆடாமல், தவறான ஷாட்டை ஆட முயன்று மொக்கையாக ஆட்டமிழந்துகொண்டிருந்த ரிஷப் பண்ட், இப்போதெல்லாம், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், மற்ற பந்துகளில் சிங்கிள் ரொடேட் செய்தும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை கவாஸ்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். ரிஷப் குறித்து பேசிய கவாஸ்கர், ரிஷப் பண்ட்டின் ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. கடந்த 4 மாதங்களாக செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஸ்மார்ட்டாகவும் இண்டெலிஜெண்ட்டாகவும் ஆடுகிறார். எல்லா பந்தையும் அடித்து ஆட நினைப்பதில்லை. சரியான பந்துக்காக காத்திருந்து பெரிய ஷாட்டுகளை ஆடுகிறார். ஃபீல்டர்களை பார்த்துக்கொண்டு, அருமையாக கேப்பில் அடிக்கிறார் என்று ரிஷப்பை கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?