சுப்மன் கில்லிற்கு ஐசிசி சிறந்த வீரருக்கான விருது!

Published : Feb 13, 2023, 05:24 PM IST
சுப்மன் கில்லிற்கு ஐசிசி சிறந்த வீரருக்கான விருது!

சுருக்கம்

ஜனவரி மாதத்திற்கான ஐசிசி ஆண்களுக்கான சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும், ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஐசிசி விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்தின் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!

கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 110 ரன்கள் குவித்தார். இதையடுத்து, கடந்த மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இதையடுத்து நடந்த ஒரு நாள் போட்டியில் 3ஆவது ஆட்டத்தில் சுப்மன் கில் 116 ரன்கள் குவித்தார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்தார். 3ஆவது ஒரு நாள் போட்டியில் 112 ரன்கள் எடுத்தார். இதே போன்று 3ஆவது டி20 போட்டியில் சுப்மன் கில் 126 ரன்கள் குவித்தார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

WPL 2023 Auction: இந்தியா, ஆஸி., வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி! இங்கி., ஆல்ரவுண்டருக்கு 2வது அதிகபட்ச தொகை

கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பேட்டிங்கில் சுப்மன் கில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்தின் டெவோன் கான்வேயும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதுக்கு சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெறவில்லை. 2ஆவது போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WPL 2023 Auction: ஸ்மிரிதி மந்தனாவை அதிகபட்ச தொகைக்கு தட்டிதூக்கிய ஆர்சிபி! ஹர்மன்ப்ரீத் கௌரை வாங்கியது மும்பை

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!