காயத்தை எப்படி மறைத்தார் கில்? எனக்கு பெரும் வியப்பா இருக்கு.. முன்னாள் வீரர் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Jul 3, 2021, 10:24 PM IST
Highlights

ஷுப்மன் கில் அவரது காயத்தை இவ்வளவு நாளாக எப்படி மறைத்துவைத்திருந்தார் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 

ஆஸி., சுற்றுப்பயணத்தில் அந்த டெஸ்ட் தொடரின் இடையே இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஷுப்மன் கில், அந்த தொடரை தொடர்ந்து இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக ஆடினார். ஆனால் அந்த தொடர்களில் எல்லாம் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அவருக்கு இந்த போட்டிகள் அனைத்தும் சொதப்பலாகவே அமைந்தன. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பலாக ஆடினார். இந்திய அணியும் ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி அந்த தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், காயம் காரணமாக ஷுப்மன் கில் அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். மயன்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இருப்பதால் அவர்களில் ஒருவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். அதனால் பிரச்னையில்லை. 

ஆனாலும் இவ்வளவு நீண்ட தொடருக்கு சென்ற ஷுப்மன் கில், எப்படி மறைத்தார்? ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் அவரது காயத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஆகிய கேள்விகளை முன்னாள் வீரர் சபா கரீம் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சபா கரீம், ஷுப்மன் கில் அவரது காயத்தை மறைத்து வைத்திருந்தது எனக்கு வியப்பாக இருக்கிறது. நீண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இந்திய அணியுடன் சென்றிருக்கிறார் ஷுப்மன் கில். வீரர்களின் ஃபிட்னெஸை உறுதி செய்ய ஃபிசியோக்கள், மருத்துவர்கள் உள்ளனர். ஆனாலும் ஷுப்மன் கில்லின் காயத்தை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது என்றார் சபா கரீம்.
 

click me!