5 கிலோ உடல் எடையை குறைத்த கேப்டன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

Published : Jul 11, 2023, 04:42 PM IST
5 கிலோ உடல் எடையை குறைத்த கேப்டன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல் எடையை 5 கிலோ வரையில் குறைத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் வரையில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். இந்த நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு டொமினிகாவில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக ஓய்வில் இருந்த ரோகித் சர்மா மனைவி, குழந்தையோடு நேரத்தை செலவிட்டதோடு, கடுமையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தியாவை வீழ்த்தும் நேரம் வந்து விட்டது – பிரையன் லாரா நம்பிக்கை!

இதன் காரணமாக ஃபேட்டாக இருந்த ரோகித் சர்மா உடல் எடையை 5 கிலோ வரையில் குறைத்துள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்த ரோகித் சர்மாவுக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2019 அம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் மட்டும் அவர் 5 சதங்கள் அடித்திருந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்த நிலையில், தன்னை உலகக் கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தயாரிப்படுத்திக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அவுட்டான கடுப்பில் மைதானப் பொருட்களை சேதப்படுத்திய கே.கே.ஆர் வீரர்.. செக் வைத்த பிசிசிஐ!
MS Dhoni: இனி கிரவுண்டுக்கே வர மாட்டார்..? அணிக்கு திரும்பாத தோனியால் ஏக்கத்தில் ரசிகர்கள்..